Thursday, June 20, 2013

கோவில் பிரச்சனை: கோட்டாட்சியர் தலைமையில் அமைதிபேச்சு

News from 


சிவகாசி அருகே கோவில்பிரச்சனை தொடர்பாக செவ்வாய்கிழமை கோட்டாட்சியர் எஸ்.ஜி.ரெங்கன் தலைமையில் அமைதிக்கூட்டம் நடைபெற்றது.

சிவகாசி அருகே வெள்ளையாபுரத்தில் புதிதாக காளியம்மன்கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் கட்டஅமைக்கப்பட்ட குழு வினர் இது வரை கணக்கு கொடுக்க வில்லையாம். கணக்கு கொடுத்துவிட்டுதான் கோவிலைதிறக்கவேண்டும் என ஒரு தரப்பினர் கூறினார்களாம். இதையடுத்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதால் கோவில் விழா கொண்டாடமுடியாத நிலை ஏற்பட்டது.பின்னர் இது குறிக்கு கோட்டாட்சியர் தலைமையில் அமைதிக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் வரவு செல்லு மற்றும் நன்கொடை வசூல் செய்த ரசீது புத்தகம் உள்ளிட்டவைகளை வட்டாட்சியரிம் 25.6.2013ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.நன்கொடை நிலுவை யை வசூல் செய்து,31.7.1013ஆம் தேதிக்குள் கல்வெட்டு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்டமுடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.இக்கூட்டத்தில் அக்கிராம நாட்டாமை செல்லக்கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment