Thursday, June 20, 2013

2 பட்டாசு ஆலை சஸ்பெண்ட்

அனுமதியில்லாத பட்டாசு ரகங்கள் தயாரித்த இரு பட்டாசு ஆலைகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.சிவகாசி பகுதி பட்டாசு ஆலைகளில், 5 குழுக்கள் திடீரென ஆய்வு நடத்தி வருகின்றனர். விதிமீறும் ஆலைகளை சீல் வைக்கின்றனர். நேற்று, சிவகாசி தீப்பெட்டி, பட்டாசு தனித் தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் ,ஓ.கோவில்பட்டியில் உள்ள காசி பயர் ஒர்க்ஸ், ஓண்டிப்புலி நாயக்கனூரில் உள்ள ஸ்ரீராம் பயர் ஒர்க்ஸ் ஆலைகளை, ஆய்வு செய்தனர். இந்த ஆலை டி.ஆர்.ஓ., லைசென்சில் செயல்படுகிறது. இங்கு குறிப்பிட்ட 8 ரக பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும். ஆனால், அனுமதி இல்லாத டபுள் சவுண்ட் பட்டாசு தயாரிப்பது ஆய்வில் தெரிந்தது. அனுமதி இல்லாத ரக பட்டாசுகளை தயாரித்தற்காக, இரு ஆலைகளையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. 

News from 

No comments:

Post a Comment