லோடு ஆட்டோக்களில் ஆட்களை ஏற்றி சென்றால், வாகன உரிமம், டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என, ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சிவகாசியில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் முறைப்படுத்த ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ், தொடக்க கல்வி அலுவலர் தாமோதரன் முன்னிலை வகித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பார்த்தீபன், ராஜா, சுந்தரபாண்டியன், டிராபிக் இன்ஸ்பெக்டர் ராஜாராம், எஸ்.ஐ., மருதுபாண்டி, அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக்., பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், ஆட்டோ டிரைவர்கள், லோடு ஆட்டோ வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி குழந்தைகளை வாகனங்களில் பாதுகாப்பாக ஏற்றி செல்வது குறித்தும், அளவிற்கு அதிகமான பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்ல கூடாது என, வலியுறுத்தப்பட்டது.
மினிலோடு ஆட்டோக்களில் பொருட்களை தவிர, எந்த சூழ்நிலையிலும் ஆட்களை ஏற்றி செல்ல கூடாது. ஆட்களை ஏற்றி சென்றால், மினிலோடு ஆட்டோவின் உரிமம், டிரைவர் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். பள்ளி மாணவர்கள் பிற வாகனங்களில் லிப்ட் கேட்டு செல்ல கூடாது என்பதையும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உரிய வாகனங்கள், அல்லது பஸ்களில் அனுப்பி வைக்க வேண்டும். டூவீலரில் பெற்றோர்களே அதிகமானவர்களை ஏற்றி செல்வதை தவிர்க்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.
News from
சிவகாசியில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் முறைப்படுத்த ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ், தொடக்க கல்வி அலுவலர் தாமோதரன் முன்னிலை வகித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பார்த்தீபன், ராஜா, சுந்தரபாண்டியன், டிராபிக் இன்ஸ்பெக்டர் ராஜாராம், எஸ்.ஐ., மருதுபாண்டி, அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக்., பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், ஆட்டோ டிரைவர்கள், லோடு ஆட்டோ வாகன ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளி குழந்தைகளை வாகனங்களில் பாதுகாப்பாக ஏற்றி செல்வது குறித்தும், அளவிற்கு அதிகமான பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்ல கூடாது என, வலியுறுத்தப்பட்டது.
மினிலோடு ஆட்டோக்களில் பொருட்களை தவிர, எந்த சூழ்நிலையிலும் ஆட்களை ஏற்றி செல்ல கூடாது. ஆட்களை ஏற்றி சென்றால், மினிலோடு ஆட்டோவின் உரிமம், டிரைவர் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். பள்ளி மாணவர்கள் பிற வாகனங்களில் லிப்ட் கேட்டு செல்ல கூடாது என்பதையும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உரிய வாகனங்கள், அல்லது பஸ்களில் அனுப்பி வைக்க வேண்டும். டூவீலரில் பெற்றோர்களே அதிகமானவர்களை ஏற்றி செல்வதை தவிர்க்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.
News from
No comments:
Post a Comment